ரேகா – 22 வயசு. அம்மா-அப்பா ரெண்டு பேரும் வேலைக்கு போயிடுவாங்க. அவளுக்கு ஒரு தோழி இருந்தா – சஞ்சனா. சஞ்சனாவோட காதலன் பேரு அர்ஜுன். மூணு பேரும் ஒரே கல்லூரில படிச்சவங்க. ஆனா, ரேகாவுக்கு அர்ஜுன் ரெண்டு பேரும் மிகவும் நெருக்கமானவர்கள். காதலுக்கு கீழே, நட்புக்கு மேலே. அவ்வப்போது தொடுதல்கள், முத்தங்கள், சீண்டல்களுடன் நின்றுவிடும் அளவுக்கு நெருக்கமான அன்பு.
அர்ஜுன் இதை வெறும் சாதாரண தொடர்பாகவே நினைத்தான். ஆனால், சஞ்சனா அர்ஜுனை தனது காதலனாக நினைத்தாள்.
ஒரு நாள் சஞ்சனா ரேகாவோட வீட்டுக்கு வந்து அழுதுட்டே சொன்னா,
“அர்ஜுன் என்னை பிரிஞ்சுட்டான். வேற ஒரு பொண்ண லவ் பண்றானாம்.. எனக்கு அவனோட குழந்தை வேணும்னு சொன்னேன்… அதுக்கு கூட சம்மதிக்கல... இப்ப என் குடும்பம் வேற பையனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி என்னை கட்டாயப்படுத்துது… வேற வழி தெரியல ரேகா.”
ரேகா ஒண்ணும் பேசல. ஆனா தலையை ஆட்டினா.
“நான் பார்த்துக்குறேன்.”
அடுத்த நாள் ரேகா அர்ஜுனை அழைச்சு போனா. ஒரு சின்ன டீக்கடை பின்னாடி, பழைய கட்டடத்துல.
“என்ன வேணும்?” அர்ஜுன் கோபமா கேட்டான்.
“ஒரு சின்ன உதவி. பணம் தரேன்.”
“என்ன உதவி?”
ரேகா நேரா சொன்னா. “ஒரு முறை. உன்னோடதை ஒரு கப்-ல பிடிச்சு கொடு. அதான் வேணும். எனக்கு தெரிஞ்ச டாக்டர் ஒருத்தர் கேட்டாரு.. 25,000 பணம் கொடுப்பாங்க” என்றாள்.
அர்ஜுன் முதல்ல சிரிச்சான். பிறகு அதிர்ந்து போனான். “நீ பைத்தியமா?”அர்ஜுன் நெடுநேரம் பார்த்தான். 25,000 ரூபாய் என்ற பணத்தை மட்டும் பார்த்தான்.
“எப்ப வேணும்?”
“இன்னிக்கே.. இப்போவோ.. இந்தா இந்த பிளாஸ்டிக் டப்பாவுல பிடிச்சுகிட்டு வா..”
அடுத்த ஒரு மணி நேரத்துல, ஒரு சின்ன பிளாஸ்டிக் கன்டெய்னர்-ல அர்ஜுன் கொடுத்துட்டு போயிட்டான். ரேகா அதை ஒரு சின்ன கூலர் பாக்ஸுக்குள்ள வச்சு, ஐஸ் போட்டு எடுத்துட்டு வந்தா.
அதே இரவு ரேகா சஞ்சனாவை தனியா அழைச்சு போனா. ஒரு பிரைவேட் கிளினிக்குக்கு. அங்க ஒரு ஃப்ரெண்ட் டாக்டர் இருந்தார் – பணத்துக்கு எதுவும் பண்ண தயாரா இருந்தவர்.
ஐ.யூ.ஐ (Intrauterine Insemination) செய்தார்கள். ஆறு வாரம் கழிச்சு சஞ்சனா கர்ப்பமாக இருப்பது உறுதியானது. குடும்பத்திற்கு தெரியவில்லை. அதே நேரம், சஞ்சனாவுக்கு வேறு ஒருவருடன் கல்யாணம் நிச்சயம் ஆச்சு. ஒரு டீக்கடைக்காரர் மகனுடன்.
திருமண நாள் நெருங்கியது, நான் கர்ப்பமாக இருக்கிறேன்.. அப்பா அர்ஜுன்.. என்று குண்டை தூக்கி போட்டாள் சஞ்சனா. ஊரே மிரண்டு போனது,
போலீசில் புகார். விசாரணை ஆரம்பமாச்சு.
முதல்ல சஞ்சனாவ அழைத்தார் ஆய்வாளர்.
“உனக்கு தெரியுமா உன்னோட குழந்தைக்கு அப்பா யாருனு?”
சஞ்சனா அழுதுட்டே, “அர்ஜுன் சார்…”
“அப்போ அர்ஜுன் தான்.. உன்ன கர்ப்பமாக்கினானா?”
"ஆமா, அவருதான் அப்பா..” இங்க பாருங்க நாங்க ரெண்டு பேரும் நெருக்கமா எடுத்துகிட்ட போட்டோஸ்.
அர்ஜுன் வந்தான்.
“சார்.. நான் அவ கூட நெருக்கமா இருந்திருக்கேன்.. நாங்க ப்ரெண்ட்ஸ் மட்டும் தான். ரெண்டு பேரும் அதை தாண்டி எந்த தப்பும் பண்ணது இல்ல சார்.. நான் வேற பொண்ண லவ் பண்றேன்.. நாங்க பிரிஞ்சு 4 மாசம் ஆச்சு. அப்புறம் எப்படி? ரேகா ரெண்டு மாசத்துக்கு முன்னாடி என்கிட்டே 25,000 பணத்தை குடுத்து ஒரு டப்பாவுல என்கிட்டே வாங்கிட்டு போனா.. எனக்கு அவ மேல தான் சந்தேகம்..”
ரேகாவ கூப்பிட்டாங்க.
ரேகா வந்து நின்னா. முகத்துல எந்த பயமும் இல்ல.
எஸ்.ஐ கேட்டார், “நீதான் அர்ஜுன்கிட்ட இருந்து… அதை வாங்கி சஞ்சனா கிட்ட கொடுத்தியா?”
ரேகா பயம் கலந்த முகத்துடன் அழுதபடியே. “ஆமா.. சார். ஆனா திருடல. அவன் விருப்பப்பட்டு தான் கொடுத்தான். 25 ஆயிரத்துக்கு.”
எஸ்.ஐ தலையை பிடிச்சாரு. “இது எந்த சட்டத்துலயா வருது?.. என்னன்னு கேஸ் எழுதுறது.. இதுங்களால நம்ம தலை சுத்துது..”
“அதான் சார்… எனக்கும் தெரியல... என்று குழம்பினார் ஏட்டு"
கடைசியா டாக்டர கூப்பிட்டாங்க.
டாக்டர் சொன்னார், “நான் எதுவும் பண்ணல சார்.. எப்படி பண்ணனும்ன்னு என்கிட்டே கேட்டாங்க நான் சொன்னேன்.. அவ்ளோ தான் எனக்கு தெரியும்..”
ஆர்வாளர் ராஜசேகர் கடைசியா ஒரு பெருமூச்சு விட்டு,
“இதுக்கு மேல விசாரிச்சா… நம்ம கேஸ் டைட்டில் தான் வேற மாதிரி ஆயிடும். ‘முதல் முறையாக காதலனின் விந்தணுவை திருடி கர்ப்பமான இளம்பெண் அப்டின்னு’னு போயிடும்... என்ன நியூஸ் போட்றலாமா..?” மூன்று பேரும் மிரண்டனர்.
அர்ஜுன் என்னப்பா சொல்லுற.. உன் கையில தான் முடிவு இருக்கு. இந்த பொண்ணுங்க மேல கேஸ் குடுக்குறியா..? இல்ல,..?
வேணாம் சார்.. நானே சஞ்சனாவ கல்யாணம் பண்ணிக்கிறேன்.. எனக்காக தானே அவ இவ்ளோ விஷயமும் செஞ்சிருக்கா.. சஞ்சனாவ எனக்கு நல்லா தெரியும்.. எனக்காக இவ்ளோ பண்ண பொண்ணு மேல புகார் கொடுக்க எனக்கு மனசு வரல..
கேஸ் ஃபைல் மூடப்பட்டது.
ரேடியோ செட்டுகள் கரெண்ட் கம்பத்தில் ஏறின.. சீரியல் லைட்டுகள் மின்னியது.. ஊர் சாலையின் இரண்டு பக்கமும் ட்யூப் லைட்டுகள் தொங்க இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்த சஞ்சனா ஆய்வாளர் ராஜசேகர் அவரது மனைவி கீர்த்தனா தலைமையில் காதலன் அர்ஜுனை கரம் பிடித்தாள்.
தன்னுடைய சார்பில் சஞ்சனாவிற்கு அரை பவுன் கம்மல் அணிவித்தார் ஆய்வாளரின் மனைவி கீர்த்தனா. அர்ஜுனுக்கு அரை பவுனில் மோதிரம் போட்டு மணமக்களை வாழ்த்தினார் ஆய்வாளர் ராஜசேகர். எங்களுக்கு, கல்யாணம் ஆகி 18 வருஷம் ஆச்சு ஆனா, குழந்தை இல்லை. உங்க குழந்தை இப்போ கருவில் இருக்கு. இது தான் உங்களுடைய எதிர்காலம். சொத்து எல்லாமே.
உங்களை என்னோட புள்ளைங்களா நினைச்சு வாழ்த்துறோம்.. சந்தோஷமா இருங்க..! இங்க பாருமா.. பையன் எதாச்சும் எசக்கு பிசகா பண்ணா உடனே ஒரு போன் பண்ணு.. நான் பாத்துக்குறேன்.. என்று சஞ்சனாவுக்கு கூடுதல் நம்பிக்கை கொடுத்துவிட்டு கிளம்பினார் ஆய்வாளர்.
அந்த காட்சியை அப்படியே படம் பிடித்தார் போட்டோ கிராஃபர். இது தமிழ்நாட்டுல நடந்த ஒரு சம்பவம் தான்.
0 கருத்துகள்