ரஷ்யாவுடனான போருக்கு மத்தியில் பல குடியுரிமையை அனுமதிக்கும் உக்ரைன்


குடிமக்கள் 2 அல்லது பல குடியுரிமையை வைத்திருக்க அனுமதிக்கும் சட்டத்தை உக்ரைன் நாடாளுமன்றம் புதன்கிழமை நிறைவேற்றியது. ரஷ்யாவுடனான உக்ரைனின் போருக்கு மத்தியில் இந்நடவடிக்கை வந்துள்ளது. "உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான உக்ரைனியர்களுடன் உறவுகளை பேணுவதற்கும் மீட்டெடுப்பதற்கும் இம்முடிவு ஒரு முக்கியமான படி" என உக்ரைனின் ஒற்றுமைக்கான அமைச்சர் ஒலெக்ஸி செர்னிஷோவ் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்