பள்ளி, கல்லூரிகளின் பெயரில் இடம்பெற்றுள்ள சாதி பெயர்கள் நீக்கப்படுமா என அரசு விளக்கம் தர சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய செங்குந்த மகாஜன் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரி நியமித்ததை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில், சில அரசு பள்ளிகளிலும் சாதி பெயர்கள் உள்ளதாக நீதிபதி கூறினார். இதற்கு அரசு தரப்பில், பள்ளிக்கு நன்கொடை அளித்தவர்கள் பெயர் பள்ளிக்கு சூட்டப்பட்டிருக்கும் என விளக்கமளித்தனர்.
0 கருத்துகள்