கோட்டூர்புரத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் திட்டப் பயிற்சியில் பல்லி விழுந்த சுண்டல் சாப்பிட்ட 10க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. 100 உதவி பேராசிரியர்கள் பங்கேற்ற இந்த பயிற்சியில், வழங்கப்பட்ட சுண்டலில் 2 பல்லிகள் செத்து கிடந்தன. இதை அறியாமல் உட்கொண்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
0 கருத்துகள்