சென்னை பல்கலை.யில் பல்லி விழுந்த சுண்டல் சாப்பிட்ட 10 உதவி பேராசிரியர்களுக்கு வாந்தி, மயக்கம்


கோட்டூர்புரத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் திட்டப் பயிற்சியில் பல்லி விழுந்த சுண்டல் சாப்பிட்ட 10க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. 100 உதவி பேராசிரியர்கள் பங்கேற்ற இந்த பயிற்சியில், வழங்கப்பட்ட சுண்டலில் 2 பல்லிகள் செத்து கிடந்தன. இதை அறியாமல் உட்கொண்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்