சென்னை ஆர்.கே. நகரில் குடும்ப தகராறில் 30 வயது அஜய் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று ஆட்டோ டிரைவரான அஜய், மனைவி பிரியாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அவர் தனது அண்ணன் அன்புவிடம் கூறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அன்பு கத்தியுடன் தங்கை வீட்டிற்கு சென்று, அஜயிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றவே அவர் அஜயை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
0 கருத்துகள்