குடியரசு தினத்தையொட்டி, சென்னையில் ஜன.25, 26 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு நாள் விழா அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஜன.26 அன்று நடைபெற உள்ளது. இதையொட்டி, ராஜ் பவன் முதல் மெரினா கடற்கரை வரையிலும், முதல்வர் இல்லம் முதல் மெரினா கடற்கரை வரையிலும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்