ஹரியானாவில் மாமியார் வீட்டை விட்டு ஓடியதாக கூறப்பட்ட பெண், 10 அடி ஆழ குழியிலிருந்து சடலமாக மீட்பு


ஹரியானா, ஃபரிதாபாத்தில் வெள்ளியன்று 24 வயது தனு என்ற பெண்ணின் சடலம் அவரது மாமியார் வீட்டின் அருகே 10 அடி ஆழ குழியிலிருந்து மீட்கப்பட்டது. உ.பியை சேர்ந்த தனுவுக்கு 2 ஆண்டுகளுக்கு முன் அருண் என்பவருடன் திருமணமானது. திருமணமான சில மாதங்களில் மாமியார் வீட்டில் பணம், நகை கேட்டு கொடுமை செய்வதாக தனு தாய் வீட்டில் கூறியுள்ளார். இதனிடையே தனு வீட்டை விட்டு ஓடிவிட்டதாக அவரது கணவர் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்