தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்


தமிழகம், புதுவை & காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3°C அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் கூறியுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 32-33°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23°C ஆகவும் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்