₹2 கோடி மதிப்பிலான 2.2 கிலோ சூடாபெடரின் என்ற போதைப்பொருளை சென்னையில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த போதைப்பொருள் வைத்திருந்த பீர்முகமது, ரகுமான் ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கமார் அலி என்பவரிடமிருந்து போதைப்பொருளை வாங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்துகள்