தருமபுரி, நெருப்பூரில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் 34 வயது சுகன்யா என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
16 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோட்டை சேர்ந்த முத்து என்பவரை மணந்த சுகன்யா, கணவருடன் ஏற்பட்ட தகராறில் தனது தாய் வீடான நெருப்பூருக்கு வந்துள்ளார்.
இதனிடையே, முத்துவுக்கும், சுகன்யாவுக்கும் செல்போனில் தகராறு ஏற்பட்டதால், மனமுடைந்த சுகன்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
0 கருத்துகள்