கோவையில் புலி நகம் கொண்ட செயினை அணிந்து இன்ஸ்டாகிராம் சேனலுக்கு பேட்டி கொடுத்தவர் கைது


கோவையில் புலி நகம் கொண்ட செயினை அணிந்து இன்ஸ்டாகிராம் சேனலுக்கு பேட்டி கொடுத்த பாலகிருஷ்ணன் என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். கழுத்தில் அணிந்திருந்த செயின் பற்றி இன்ஸ்டா பிரபலம் எழுப்பிய கேள்விக்கு, "இது புலி நகம். ஆந்திராவில் விலை கொடுத்து வாங்கினேன்" என பதிலளித்தார். வீடியோ வைரலாகவே, பாலகிருஷ்ணன் வீட்டில் சோதனையிட்ட வனத்துறையினர், புள்ளிமான் கொம்பு, புலி நகம் கொண்ட செயினை பறிமுதல் செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்