உ.பியில் தாயின் மரணத்தை படங்களாக வரைந்து காட்டிய 4 வயது சிறுமி, 'அப்பா தான் கொன்றார்' என வாக்குமூலம்


உத்தரபிரதேசத்தில் திங்களன்று 27 வயது திருமணமான பெண் சோனாலி உயிரிழந்த நிலையில், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் பெண்ணின் 4 வயது மகள் தர்ஷிதா, தனது தாய் எப்படி இறந்தார் என்பதை படங்களாக வரைந்து காண்பித்தார். மேலும் அவர், "என் அப்பா என் அம்மாவை மோசமாக அடித்தார், பாட்டி அவரை படிக்கட்டிலிருந்து தள்ளிவிட்டார். பின் என் அப்பா அவர் கழுத்தை நெரித்து தூக்கிலிட்டார்" என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்