தமிழகத்தில் பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் 3.16% உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் திங்கட்கிழமை அறிவித்துள்ளார். புதிய மின் கட்டண உயர்வு நாளை (ஜூலை 01) முதல் அமலுக்கு வரும் என்றார். அதே சமயம், சிறுவணிகர்களுக்கும், அனைத்து வீட்டு இணைப்புகள், குடிசை மற்றும் குறுந்தொழில் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் இல்லை எனவும் தற்போதுள்ள அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என கூறினார்.
0 கருத்துகள்