கோவில்களில் முதல் மரியாதை கொடுக்கும் வழக்கத்தை நிறுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. ஈரோடு பந்தீஸ்வரர் கோவிலில் நடைபெறும் மகா பெரிய குண்டம் விழாவில் முதல் மரியாதை வழங்க உத்தரவிடக்கோரி தேவராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் இவ்வாறு கூறியது. மேலும், பல கோவில் விழாக்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட காரணமாக இருப்பதே இந்த முதல் மரியாதைதான் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தது.
0 கருத்துகள்