உ.பியில் பஸ்ஸில் வெளியே எட்டி பார்த்த சிறுவனின் தலை துண்டாகி மரணம்


உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் ஞாயிறன்று பஸ் பயணத்தின்போது ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டிய 11 வயது சிறுவன் மீது வாகனம் மோதியதில் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்தான்.

உறவினர் ஒருவரின் திருமண ஊர்வலத்தில் பங்கேற்ற சிறுவன் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த நேரத்தில் காரில் பின்னால் வந்து கொண்டிருந்த சிறுவனின் தந்தை, தனது மகனின் தலை சாலையில் கிடப்பதை கண்டு கதறி அழுதார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்