உத்தரபிரதேசம் பிரயாக்ராஜில் முதலிரவின்போது தன்னிடம் நெருக்கமாக முயற்சி செய்த கணவனை மணமகள் கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது. அப்பெண், "என்னை தொட்டால், உன்னை 35 துண்டுகளாக வெட்டுவேன்" என்று கூறி மிரட்டியுள்ளார். அமன் என்பவரை காதலித்து வந்த அப்பெண், திருமணமான சில தினங்களில் வீட்டின் சுவர் ஏறி குதித்து காதலனுடன் ஓடினார். இதையடுத்து பெண்ணின் கணவர் போலீசில் புகாரளித்தார்.
0 கருத்துகள்