வரும் பிப்ரவரி மாதம் முதல் சென்னையில் தனியார் மினி பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி சென்னை புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மினி பஸ்கள் இயக்கப்படும் நிலையில், கூடுதல் பஸ் சேவை தேவைப்படுவதால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்