செவ்வாயன்று இரவு வானில் 6 கோள்கள் தெரியும் அதிசய நிகழ்வு


வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய 6 கோள்களும் வானில் காட்சி தரும் அதிசய நிகழ்வு செவ்வாய் இரவு (ஜன.21) நடைபெறவுள்ளது. 6 கோள்களும் வில் வடிவில் வானில் தோன்றும். இதில் யுரேனஸ், நெப்டியூன் தவிர இதர 4 கோள்களை வெறும் கண்களால் பார்க்க முடியும். ஆனால் யுரேனஸ், நெப்டியூன் கோள்களை காண டெலஸ்கோப்/ பைனாகுலர் அவசியமாகும். இந்த அரிய வகை நிகழ்வு சுமார் ஒரு மாதம் வரை நீடிக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்