நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் குத்திய நபர் கைது


மும்பை பாந்த்ராவில் உள்ள நடிகர் சைஃப் அலி கானின் வீட்டில் அவரை கத்தியால் குத்திய நபரை தானேயில் வைத்து மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான நபர், உணவகத்தில் ஊழியராக பணியாற்றி வந்ததும், அவர் இந்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ஜன.16 அதிகாலை 2.30 மணியளவில் சைஃப் அலி கான் தாக்கப்பட்டார். லீலாவதி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் தற்போது குணமடைந்து வருகிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்