கோவையில் சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதி ஆணவக்கொலை, இளைஞரின் அண்ணன் குற்றவாளி என தீர்ப்பு


கோவை மேட்டுப்பாளையத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பியையும் அவரது மனைவியையும் கொன்ற வழக்கில் வினோத்குமார் என்பவரை குற்றவாளி என கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2019ல் திருமணம் செய்த கனகராஜ் & வர்ஷினி பிரியா எனும் அந்த தம்பதியை கொலை செய்த வழக்கில் மேலும் மூவர் கைதாகி விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் வினோத்குமாருக்கு மரண தண்டனை வரை வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்