அமெரிக்க அதிபராக திங்களன்று பதவியேற்கவுள்ள டிரம்ப், டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக அளித்த உறுதியை அடுத்து, டிக்டாக் செயலி மீண்டும் செயல்பட தொடங்கியது. "இதற்காக டிரம்பிற்கு நன்றி தெரிவிக்கிறோம், இது தன்னிச்சையான தணிக்கைக்கு எதிரான ஒரு வலுவான நிலைப்பாடு" என டிக்டாக் செயலி தெரிவித்தது.
அமெரிக்காவில் 17 கோடி பயனர்கள் இச்செயலியை பயன்படுத்தும் நிலையில், ஞாயிறன்று தடை அமலுக்கு வந்தது.
0 கருத்துகள்