ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய 150 திமிங்கலங்கள்; கருணை கொலை செய்ய அந்நாட்டு அரசு முடிவு


ஆஸ்திரேலியாவின், தீவு மாகாணங்களில் ஒன்றான தாஸ்மானியாவின் கடற்கரையோர பகுதியில் கரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணை கொலை செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. மோசமான வானிலை காரணமாக அவற்றை கடலில் விடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கரை ஒதுங்கிய 150-க்கும் மேற்பட்ட திமிங்கலங்களில் 90 திமிங்கலங்களே உயிருடன் உள்ளன. இவற்றை காப்பாற்றவோ, கடலுக்குள் திருப்பி விடவோ முடியாததால் இம்முடிவு எடுக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்