கொல்கத்தாவில் 7 மாத பெண் குழந்தையை பலாத்காரம் செய்த நபருக்கு மரண தண்டனை விதிப்பு


7 மாத பெண் குழந்தையை கடத்தி, பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்ற நபரை குற்றவாளி என தீர்ப்பளித்த கொல்கத்தா சிறப்பு போக்சோ நீதிமன்றம், அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. குற்றவாளி கைது செய்யப்பட்ட 75 நாட்களுக்குள், இந்த வழக்கில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்காக, மேற்கு வங்க நீதிமன்றம் கடந்த 6 மாதங்களில் 6 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்