பக்கத்து வீட்டு சேவல் அதிகாலை 3 மணிக்கே கூவி தூக்கத்தை கெடுப்பதாக கேரளாவை சேர்ந்த நபர் புகார்


கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ண குருப் என்பவர் தனது பக்கத்து வீட்டுக்காரரான அனில் குமாரின் சேவல் அதிகாலை 3 மணிக்கே கூவி தனது தூக்கத்தைக் கெடுத்ததாக புகார் அளித்துள்ளார். அடூர் வருவாய் கோட்ட அலுவலக (RDO) அதிகாரிகள் இடத்தை ஆய்வு செய்து, சேவல் குருப்பின் தூக்கத்தை கெடுத்ததைக் கண்டறிந்து, 14 நாட்களுக்குள் சேவலை இடமாற்றம் செய்யுமாறு அனிலிடம் கூறியுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்