புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட ஞானேஷ் குமார் யார்?


தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் திங்களன்று புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக (CEC) நியமிக்கப்பட்டார். கேரளாவிலிருந்து 1988ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வுசெய்யப்பட்ட ஞானேஷ் குமார், கடந்தாண்டு ஜனவரியில் கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அமித் ஷா தலைமையிலான அமைச்சகத்தில் சுமார் இரண்டு ஆண்டுகள் செயலாளராக பணியாற்றினார். இவர் சிவில் இன்ஜினியரிங்கில் பி-டெக் பட்டம் பெற்றவர் ஆவார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்