திருப்பதியில் பெண் ஒருவர், தனது கணவர் தன்னை ஆன்லைன் செயலியில் வீடியோ காலில் நிர்வாணமாக பேசும்படி கட்டாயப்படுத்தியாக போலீசில் புகாரளித்தார். "பணத்திற்காக கணவர் என்னை நிர்வாணமாக பேச வைத்தார். 22 ஆண்டுகளில் ₹18 லட்சம் கிடைத்த பின், இனி இதை செய்ய மாட்டேன் என கூறியதால் என்னை அடித்து துன்புறுத்தினார்" என்றார். முன்பு புகாரளிக்க சென்றபோது காவலர் ஒருவர் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக குற்றம்சாட்டினார்.
தனது பணத்தில் தங்க நகைகளை வாங்கிய கணவர், தன்னை வீட்டை விட்டு துரத்தியதாக பெண் கூறினார்.
0 கருத்துகள்