தூத்துக்குடி, குலசேகரப்பட்டினத்தில் SSLV ரக ராக்கெட்டுகளை ஏவுவதற்காக கட்டப்பட்டு வரும் 2 ராக்கெட் ஏவுதளங்கள் 2 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வருமென எதிர்பார்க்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார். இது இஸ்ரோவின் வளர்ந்து வரும் ஏவுதளத்தின் சக்தியை அதிகரிப்பதுடன், திறன்களையும் மேம்படுத்த உதவும் என கூறினார். முன்பு 2,500 ஏக்கர் பரப்பளவில் இங்கு ராக்கெட் ஏவுதளம் அமைக்க பணி தொடங்கப்பட்டது.
0 கருத்துகள்