குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் 2 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும்: இஸ்ரோ தலைவர் நாராயணன்


தூத்துக்குடி, குலசேகரப்பட்டினத்தில் SSLV ரக ராக்கெட்டுகளை ஏவுவதற்காக கட்டப்பட்டு வரும் 2 ராக்கெட் ஏவுதளங்கள் 2 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வருமென எதிர்பார்க்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார். இது இஸ்ரோவின் வளர்ந்து வரும் ஏவுதளத்தின் சக்தியை அதிகரிப்பதுடன், திறன்களையும் மேம்படுத்த உதவும் என கூறினார். முன்பு 2,500 ஏக்கர் பரப்பளவில் இங்கு ராக்கெட் ஏவுதளம் அமைக்க பணி தொடங்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்