X மீதான சைபர் தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக எலான் மஸ்க் குற்றச்சாட்டு


X தளத்தின் மீதான மிகப்பெரிய சைபர் தாக்குதலில் உக்ரனைக்கு தொடர்பு இருப்பதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக பேசிய அவர், "என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் உக்ரைன் பகுதிகளை சேர்ந்த ஐபி முகவரிகளுடன் X-ஐ தகர்க்க இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது" என்றார். முன்பு, நாங்கள் ஒவ்வொரு நாளும் தாக்கப்படுகிறோம். ஆனால் இது நிறைய வளங்களுடன் செய்யப்பட்டது என கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்