திருச்செந்தூரில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்


திருச்செந்தூரில் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் முத்துக்கிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வீட்டுப்பாடம் எழுதாததால் HM சத்யா மாணவனை தாக்கிய நிலையில், தனது மரணத்திற்கு HM உட்பட 4 பேர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்தார். இதையடுத்து, சத்யா, பியூலா, வளர்மதி, எலிசபெத்-ஐ பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்