சென்னை புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் 12 பெட்டிகள் கொண்டதாக மாற்றம்


சென்னை ரயில்வே கோட்டத்தில் கடற்கரை-செங்கல்பட்டு, சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை 9-லிருந்து 12 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது. இந்த கோட்டத்தில் தினசரி 8.60 லட்சம் பயணிகள் பயணிப்பதாகவும், பயணிகளின் எண்ணிக்கை கருதி கூடுதலாக 3 பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளதாவும், இதன்மூலம் 4 லட்சம் பயணிகளுக்கு மேல் இடவசதி கிடைக்கும் என கூறியது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்