திருப்பூர் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 21 வயது இளைஞர் கைதானார். 40 வயதான ஒருவர் தத்தெடுத்து வளர்ந்து வந்த மகனுக்கு 21 வயதாகிறது. இவருக்கு 17 வயதில் ஒரு மகளும் உள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த இளைஞர் ஆசை வார்த்தை கூறி சிறுமியிடம் தனிமையில் இருந்துள்ளார். இதில் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்க மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் 3 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
0 கருத்துகள்