தென்காசியில் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட 9 பேர் மருத்துவமனையில் அனுமதி


தென்காசி, கடையம் அருகே பிரபல பிரியாணி கடையிலிருந்து பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உட்பட 9 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரியாணி சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் உடல்நல பாதிப்பு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்