போபாலில் உள்ள 90 டிகிரி வளைவு பாலத்தை தவறாக கட்டியதற்காக 2 தலைமை பொறியாளர்கள் உட்பட 7 பொறியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக ம.பி முதல்வர் மோகன் லால் யாதவ் சனிக்கிழமை தெரிவித்தார். முன்பு, தவறான வடிவமைப்பிற்கு காரணமான அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கூறியிருந்தார். ₹18 கோடியில் கட்டப்பட்ட இப்பாலத்தின் சீரமைப்பு பணிகள் முடிந்த பின் பாலம் திறக்கப்படும் என கூறியிருந்தார்.
0 கருத்துகள்