சென்னையிலிருந்து 165 பேருடன் ஞாயிறு மாலை ஐதராபாத் புறப்பட்ட இண்டிகோ விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக அவசரமாக சென்னையில் மீண்டும் தரையிறக்கப்பட்டது. விமானம் நெல்லூரில் பறந்து கொண்டிருந்தபோது, இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை அறிந்து விமானத்தை விமானி மீண்டும் சென்னைக்கு திருப்பினார். பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதுடன், மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்