கர்நாடகாவில் மனநலம் பாதிக்கப்பட்ட வயதான தாயை சாலையோரம் விட்டு சென்ற மகன்


கர்நாடகா மலவள்ளியில் கடந்த ஞாயிறன்று சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட வயதான பெண் கண்டுபிடிக்கப்பட்டார். சுமார் 70-80 வயதுடைய அந்த பெண்ணை அவரது சொந்த மகனே விட்டுச் சென்றுள்ளார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு பெண்ணை மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர். பெண்ணை விட்டு சென்ற மகனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்