கானா சென்றடைந்த பிரதமர் மோதியை விமான நிலையத்தில் வரவேற்ற அதிபர்


அரசு முறை பயணமாக புதன்கிழமை கானா தலைநகர் அக்ராவுக்கு சென்றடைந்த பிரதமர் மோதியை விமான நிலையத்தில் அந்நாட்டு அதிபர் ஜான் திராமணி மஹாமா வரவேற்றார். பிரதமர் மோதிக்கு 21 குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளில் கானா நாட்டிற்கு செல்லும் முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ள பிரதமர் மோதியை பார்க்க, அங்கு வசிக்கும் இந்தியர்கள், 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' பாடலை பாடி வரவேற்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்